ஒரு மனிதன், தன் தந்தை இறந்தபின் தனது முதிய தாயை தன்னுடன் வைத்துக் கவனிக்காமல், ஒரு ஆதரவற் றோர் இல்லத்தில் சேர்த்தான். வாழ்க்கையின் வசதிகளும், தனக்கான சுகங்களும் அவனுக்கு முக்கியமாகிவிட்டதால், தாயின் பராமரிப்பு அவனுக்கு ஒரு சுமையாக தோன்றியது. அதனால் அந்தப் பொறுப்பை பிறரிடம் ஒப்படைத்து விட்டான்.
அவன் முழுமையாகத் தாயை மறந்துவிட்டவன் அல்ல. அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது அந்த இல்லத்திற்குச் சென்று அவளை பார்த்துவிட்டு திரும்பிவிடுவான். ஆனால் அந்த சந்திப்புகளில் உண்மையான அன்பு குறைந்து, கடமை மட்டுமே இருந்தது.
ஒருநாள் அவசர செய்தி வந்தது: “உங்கள் தாய் மிக வும் மோசமான நிலையில் இருக்கிறார். உடனே வாருங்கள்.”
அந்த செய்தியை கேட்டவுடன் அவன் விரைவாக ஓடி வந்தான். தன் தாயின் அருகில் அமர்ந்து, கண்ணீர் மல்க, “அம்மா, உங்களுக்கு ஏதேனும் கடைசி ஆசை இருக்கிறதா? நான் செய்து விடுகிறேன்” என்று கேட்டான்.
அப்போது தாய் மெதுவாக, பலவீனமான குரலில், “மகனே, இந்த இல்லத்திற்கு ஒரு நல்ல மின்விசிறி வாங்கிக் கொடுத்து விடு” என்றாள்.
அந்த வார்த்தைகள் அவனை ஆச்சரியப்படுத்தின. “அம்மா, நான் வரும்போதெல்லாம் இதைப் பற்றி நீங்கள் சொல்லவில்லை. இப்போது ஏன்?” என்று கேட்டான்.
அப்போது தாய் அவனைப் பார்த்து, ஆழமான அர்த் தம் கொண்ட வார்த்தைகளை சொன்னாள்:
“மகனே, நான் இங்கேயுள்ள வெப்பத்தை தாங்கிக் கொண்டேன். ஆனால் நாளை உன் மகன் உன்னை இங்கே கொண்டு வந்தால், உன்னால் இதைத் தாங்க முடியாது.”
இந்த வார்த்தைகள் அவன் இதயத்தை நொறுக்கி யது. தாயின் அன்பும், அவன் செய்த தவறும் அவனுக்குப் புரிந்தது. அந்த உண்மையைச் சொல்லிவிட்டு தாய் அமைதி யாக உயிர் நீத்தாள்.
இந்தச்சம்பவம் நமக்கு வாழ்க்கையின் ஒரு ஆழமான உண்மையை கற்றுக்கொடுக்கிறது:
நாம் விதைப்பதையே நாம் அறுப்போம். நாம் இன்று செய்கிற ஒவ்வொரு செயலும், நாளைய வாழ்க்கையை உருவா க்குகிறது. அன்பை விதைத்தால் அன்பை அறுப்போம்; அலட் சியத்தை விதைத்தால் அதையே அனுபவிப்போம். “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற பழமொழி இதையே உணர்த்துகிறது. இன்றைய சமுதாயத்தில் குடும்ப உறவுகள் பல இடங்களில் சிதைந்து கொண்டிருக்கின்றன. சுயநலம் அதிகரிக்கும் போது அன்பு குறைகிறது. அன்பு குறையும் போது உறவுகள் பலவீனமடைகின்றன. அதனால் குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது.
பெற்றோரை மதிப்பது ஒரு கடமை மட்டுமல்ல; அது ஒரு ஆசீர்வாதத்தின் கதவு. அவர்களின் தியாகம், அன்பு, பொறுமை இவற்றை நினைவில் வைத்து நாம் அவர்களை கவனிக்க வேண்டும்.
அன்பை விதைப்போம்.
மரியாதையை விதைப்போம்.
நன்றியுணர்வை விதைப்போம்.
அப்போது நம் வாழ்க்கை நன்மைகளால் நிரம்பும்.
நாம் இன்று எப்படி நடக்கிறோமோ, அதே மாதிரி நாளை நமக்கு திரும்பி வரும். அதனால் இன்று நாம் எதை விதைக்கிறோம் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
விதைத்ததை அறுப்போம்; – எனவே
நல்லதை விதைத்து நல்லதையே அறுப்போம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்