ஒரு வாலிபன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறா மல் ஆலயத்திற்கு சென்று தேவனை ஆராதிப்பவன். அவன் ஆராதனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். சபையின் போதகருக்கும் அவன் மீது நல்ல எண்ணம் இருந்தது. ஒழுக்க மும், பக்தியும் கொண்ட இளைஞனாக அவன் அனைவராலும் மதிக்கப்பட்டான்.
ஆனால் ஒரு கட்டத்தில், அவன் திடீரென ஆலயத் திற்கு வராமல் போனான். சில வாரங்கள் கடந்தும் அவன் முகம் காணப்படவில்லை. அவன் வழக்கமாக அமரும் இருக்கை வெறுமையாக இருப்பது போதகரின் கவனத்திற்குப்பட்டது. “என்ன காரணம்? ஏன் அவன் வரவில்லை?” என்ற கவலை அவரை அவன் வீட்டிற்கு செல்லத் தூண்டியது.
ஒரு குளிர்கால நாளில், போதகர் அந்த வாலிபனின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பாக விறகுகளை வைத்து நெருப்பு மூட்டி, குளிரைத் தணித்துக் கொண்டிருந்தான் அந்த வாலிபன். போதகரை பார்த்ததும் மரியாதையுடன் வரவேற்று, நெருப்பின் அருகில் அமருமாறு கேட்டுக் கொண்டான்.
இருவரும் அமைதியாக அமர்ந்தனர். எந்த வார்த்தை யும் பேசப்படவில்லை. அந்த மௌனம் ஒரு ஆழமான தருண மாக மாறியது. சில நேரம் கழித்து, போதகர் எரிந்து கொண்டிருந்த நெருப்பிலிருந்து ஒரு விறகு குச்சியை எடுத் தார். அதை தனியே வைக்க, அது மெல்ல மெல்ல அணை ந்து போகத் தொடங்கியது. அதன் சூடும் ஒளியும் குறைந்து, இறுதியில் அது முழுவதும் குளிர்ந்தது. அதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் எதுவும் பேசவில்லை.
பின்னர், போதகர் அதே விறகு குச்சியை மீண்டும் நெருப் பிற்குள் வைத்தார். உடனே அது மீண்டும் எரியத் தொடங்கி யது. அதன் ஒளியும் சூடும் மீண்டும் உயிர்ப்பெற்றது.
இதற்குப் பிறகு, போதகர் அமைதியாக எழுந்து, “நான் வருகிறேன்” என்று மட்டும் சொல்லி செல்லத் தொடங்கினார். அப்போது அந்த வாலிபன் உணர்ச்சியுடன் அவரை நிறுத்தி, “ஐயா, நீங்கள் எதுவும் பேசாமல் இன்று ஒரு பெரிய உண்மையை எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டீர்கள். இனி நான் ஆலயத்திற்கு தவறாமல் வருவேன்” என்று கூறினான். போதகர் புன்னகையுடன் அவனை நோக்கி அமைதியாக அங்கிருந்து சென்றார்.
இந்த நிகழ்வு நமக்கு ஆழமான ஆன்மீக உண்மையை எடுத்துக்காட்டுகிறது. தனியாக இருக்கும் ஒரு விறகு எளிதில் அணைந்துவிடும். ஆனால் சுற்றிலும் விறகுகளுடன் சேர்ந்து இருந்தால் அது நீண்ட நேரம் எரியும். அதுபோல மனிதனின் விசுவாசமும் தனிமையில் மங்கிவிடும்; ஆனால் சபை ஐக்கிய த்தில் அது பலப்படும்.
மேலும், ஒருவரை திருத்தும்போது கடுமையான வார்த் தைகள் தேவையில்லை. அன்பும் ஞானமும் இருந்தால், ஒரு சிறிய செயலும் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அந்த போதகர் கண்டிக்கவில்லை, குற்றம் சாட்டவில்லை; ஆனால் அமைதியான செயலால் உண்மையை உணர்த்தினார்.
இன்றைய வாழ்க்கையிலும் இது மிக முக்கியமான பாடமாகும். பலர் தனிமையில் வாழ விரும்பி, கூட்டுத்தொழு கையை புறக்கணிக்கிறார்கள். ஆனால் இறைவேதம், “சபை கூடிவருதலை விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்திசொல் லுங்கள்” என்று எச்சரிக்கிறது.
ஆகையால், நாம் ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ வேண்டும். நம் விசுவாசத்தை வளர்க்கும் சூழலில் இருக்க வேண்டும். நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு போதனை யாக இருக்க வேண்டும்.
சில நேரங்களில்
வார்த்தைகள் தேவையில்லை;
நம் செயல்களே பேசட்டும்…
சேர்ந்து இருப்போம்! எரிந்து கொண்டிருப்போம்.!!
– போதகர். பெ. பெவிஸ்டன்